ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே துதி
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே துதி
சாற்றிடுவோம் என்றுமே
சேற்றிலிருந்தெம்மை மீட்டெடுத்தென்றும்
ஆற்றியே தேற்றுவதால்
இன்ப இயேசுவின் திவ்ய நாமத்தை
துன்பம் சூமும் எவ்வேளையிலும்
நன்றியோடு நாம் பாடிடுவோம்
- தண்ணீரைக் கடந்திடும் வேளையிலும்
அவர் நம்மோடு இருப்பேன் என்றார்
அக்கினி சூளையில் நடந்திடும் வேளையிலும்
விக்கினம் சூழாதென்றார்
- கஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்திடும்
வேளையில் சோர்ந்திடா பெலன் அளிப்பார்
நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு
நல்குவேன் கிருபை என்றார் - திகையாதே கலங்காதே என்றுரைத்தார்
அவர் திக்கற்றோராக விடார்
பயப்படாதே சிறுமந்தையே என்றழைத்தார்
பாரில் நம் மேய்ப்பனவர் - சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியடைந்தாலும
பங்கம் வராது காப்பார்
நம்மையே மீட்கவே தம்மையே ஈந்து
தரணியில் மாண்டுயிர்த்தார் - சீயோனின் ராஜனாய் சீக்கிரம் வந்துமே
சீயோனில் சேர்ந்திடுவார்
மன்னவன் இயேசுவை சந்திக்கும் அந்நாளில்
மகிமையின் சாயல் அணிவோம்