Aananthamai Inba kanaan

ஆனந்தமாய் இன்பக் கானான்

ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்
தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்

நாளுக்கு நாள் அற்புதமாய் என்னை தாங்கிடும்
நாதன் இயேசு என்னோடிருப்பார்

சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து
மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே
கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை
கண்டு நன்றியுடன் பாடிடுவேன் – ஆனந்தமாய்

வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
வாஞ்சையுடன் என்னைத் தேடிவந்தார்
எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்
இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன் – ஆனந்தமாய்

கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்
தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்
இயேசு அல்லா ஆசை இப்பூவில் வேறே இல்லை
என்றும் எனக்கவர் ஆதரவே – ஆனந்தமாய்

உம்மைப் பின் சென்று ஊழியம் செய்து
உம் பாதம் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்
தாரும் தேவா ஏழைக்கு மாறாத உம்கிருபை
கண்பாரும் என்றும் நான் உம் அடிமை – ஆனந்தமாய்