Athimaram Thulir Vidamal

அத்திமரம் துளிர்விடாமல்

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்

  • ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
    வயல்களிலே தானியமின்றிப் போனாலும்- (கர்த்தருக்குள்)
  • மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
    தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும் – (கர்த்தருக்குள்)
  • எல்லாமே எதிராக இருந்தாலும்
    சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும் – (கர்த்தருக்குள்)
  • உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
    ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும் – (கர்த்தருக்குள்)