Deva senai vaanameethu – தேவசேனை வானமீது

Bro.Emil Jebasingh

  1. தேவசேனை வானமீது கோடிகோடியாகத் தோன்றும்
    பலகோடித் திரள்கூடி குகைதேடி வேகம் ஓடும்
    விண்மீன்கள் இடம்மாறிப் பாரெங்கும் வந்து கொட்டும்
    நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )

  1. ஐந்து கண்டம் தனில் ஆளும் ஆட்சியாவும் அற்றுப்போகும்
    இருள் சூழும் இடிமுழங்கும் கூச்சல் கேட்கும் கண்ணீர் சிந்தும்
    தூயர் கூட்டம் சுத்த உள்ளம் சாட்சிப்பாடல் எங்கும் கேட்கும்
    நானோ ஆடி மிகப்பாடி என் நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )

  1. கடல் குமுறும் கரை உடையும் கப்பல் கவிழும் பெரும் நாசம்
    போக்குவரத்து யாவும் நிற்கும் இனி உலகம் என்பதில்லை
    வாக்குமாறா வேதம் கூறும் வார்த்தை யாவும் நிறைவேறும்
    நானோ ஆடி மிகப்பாடி என்நேசருடன் சேர்வேன்

அல்லேலூயா , அல்லேலூயா – ( 4 )