என்ன தியாகம், என், கல்வாரி நாயகா!
என்ன தியாகம் என், கல்வாரி நாயகா!
என்னையும் உம்மைப்போல் மாற்றிடவோ!
- விண் தூதர் போற்றிடும் – உம்
பிதாவையும் விட்டிறங்கி வந்தீரே,
மாட்டுக் கொட்டிலை வாஞ்சித்தீரையா!
மானிடர் மேல் அன்பினால்! - ஜெனித்த நாள் முதலாய் – கல்வாரியில்
ஜீவனை ஈயும் வரை
பாடுகள் யாவையும் பட்டீரையா!
பாவியை மீட்பதற்காய் - தலையைச் சாய்த்திடவோ – உமக்கு ஓர்
ஸ்தலமோ எங்குமில்லை !
உம் அடிச்சுவட்டில் நான் செல்லவோ!
முன் பாதை காட்டினீரே - தாய், தந்தை, வீடும், நாடும் – தனக்குள்ள
இஷ்டத்தையும் வெறுத்து,
அப்போஸ்தலர், சீஷரும் குருசை
அனுதினம் சுமந்தாரல்லோ! - பாடுகெல்லாம் உம்மை – மகிமையில்
பூரணமாய்ச் சேர்த்ததே:
உம்மோடு நானும் பாடு சகிக்க
என்ன தடையுமுண்டோ ? - பொய் இன்பம் எனக்கினியேன் – என்னருமை
இயேசுதான் என் பங்கல்லோ!
நேசரின் பின்னே போகத் துணிந்தேன்
நேச வலிமையினால்