Ennai kaanbavarae

என்னைக் காண்பவரே

Fr.Berkmans

என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே
ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் – ( 2 )

நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் – என்னை

1 .எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்

நன்றி ராஜா இயேசு ராஜா – ( 2)

  1. முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
    சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
    உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்
    பற்றி பிடித்திருக்கின்றீர் – நன்றி ராஜா
  2. கருவை உம் கண்கள் கண்டன
    மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
    அதிசயமாய் பிரமிக்கத்தக்கப்
    பக்குவமாய் உருவாக்கினீர் – நன்றி ராஜா
  3. உமது ஆவிக்கு மறைவாய்
    எங்கே நான் ஓட முடியும்
    உம் சமூகம் இல்லாமல்
    எப்படி நான் வாழமுடியும் – நன்றி ராஜா