கரையேறி உமதண்டை
- கரையேறி உமதண்டை
நிற்கும்போது ரட்சகா
உதவாமல் பலனற்று
வெட்கப்பட்டுப் போவேனோ ?
ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்
வெட்கத்தோடு ஆண்டவா!
வெறுங்கையனாக உம்மைக்
கண்டு கொள்ளல் ஆகுமா ?
- ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
வைத்திடாமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில்
தூக்கிப்பார் நிர்ப்பந்தராய் –ஆத்மா ஒன்றும் - தேவரீர் கை தாங்க சற்றும்
சாவுக்கஞ்சிக் கலங்கேன்
ஆயினும் நான் பெலன் காண
உழைக்காமற் போயினேன் –ஆத்மா ஒன்றும் - வாணாள் எல்லாம் வீணாளாகச்
சென்று போயிற்றே! ஐயோ !
மோசம் போனேன் விட்ட நன்மை
அழுதாழும் வருமோ ? –ஆத்மா ஒன்றும் - பக்தரே உற்சாகத்தோடு
எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் யேசுவண்டை
வந்துசேர உழைப்பீர் – ஆத்மா ஒன்றும்