Karaiyeri umathandai

கரையேறி உமதண்டை

  1. கரையேறி உமதண்டை
    நிற்கும்போது ரட்சகா
    உதவாமல் பலனற்று
    வெட்கப்பட்டுப் போவேனோ ?

ஆத்மா ஒன்றும் இரட்சிக்காமல்
வெட்கத்தோடு ஆண்டவா!
வெறுங்கையனாக உம்மைக்
கண்டு கொள்ளல் ஆகுமா ?

  1. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை
    வைத்திடாமல் சோம்பலாய்க்
    காலங்கழித்தோர் அந்நாளில்
    தூக்கிப்பார் நிர்ப்பந்தராய் –ஆத்மா ஒன்றும்
  2. தேவரீர் கை தாங்க சற்றும்
    சாவுக்கஞ்சிக் கலங்கேன்
    ஆயினும் நான் பெலன் காண
    உழைக்காமற் போயினேன் –ஆத்மா ஒன்றும்
  3. வாணாள் எல்லாம் வீணாளாகச்
    சென்று போயிற்றே! ஐயோ !
    மோசம் போனேன் விட்ட நன்மை
    அழுதாழும் வருமோ ? –ஆத்மா ஒன்றும்
  4. பக்தரே உற்சாகத்தோடு
    எழும்பிப் பிரகாசிப்பீர்
    ஆத்துமாக்கள் யேசுவண்டை
    வந்துசேர உழைப்பீர் – ஆத்மா ஒன்றும்