(மகிமை மாட்சிமை நிறைந்தவரே)
மகிமை மாட்சிமை நிறைந்தவரே!
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்
- உன்னத தேவன் நீரே! ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே, பாரில் மடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை - ஒருவரும் சேரா ஒளியில்,வாசம் செய்பவரே!
ஒளியினை தந்ததுமே, இதயத்தில் வாசம் செய்யும்
ஒளிநிறைவே அருள் நிறைவே!
என்றும் தொழுதிடுவோம் – மகிமை - பரிசுத்த தேவன் நீரே, பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே, சத்திய தேவன் நீரே!
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம் – மகிமை - நித்திய தேவன் நீரே ,நீதி நிறைந்தவரே!
அடைக்கலமானவரே ,அன்பு நிறைந்தவரே!
நல்லவரே வல்லவரே
என்றும் தொழுதிடுவோம் – மகிமை