மந்தையில் சேரா ஆடுகளே
Dr.N.Emil Jebasingh
மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே……
அழைக்கிறார் இயேசு…..
அவரிடம் பேசு…..நடத்திடுவார்……
- காடுகளில் பல நாடுகளில் என்
ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை! - சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு -எனை
அங்கு கொண்டு செல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர்! - எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும் – என்னைப்
போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தர வேண்டும்

