Nanri seluthuvaen -நன்றி செலுத்துவேன்

Pr. Gabriel Thomasraj

1.புரியாத பாதையில், புதிய வழிகளில்
நடத்தினீர், ஏந்தினீர், என் இயேசுவே
எட்டாத உயரத்தில், தகுதியில்லா இடங்களில்
உயர்த்தினீர் ஸ்தாபித்தீர், என் இயேசுவே

நன்றி செலுத்துவேன், நன்றி செலுத்துவேன்
இது உம்மால் ஆயிற்று
இது அதிசயமானது
நன்றி செலுத்துவேன், நன்றி செலுத்துவேன்
உந்தன் நன்மையை கொண்டாடி பாடுவேன்

2.ஏன் இந்த வேதனை? என்று கலங்கின நாட்களில்
கிருபையே தாங்கிற்றே, என் இயேசுவே
கண்ணீரால் படுக்கையை நனைத்த வேளையில்
அணைத்தது (உம்) பிரசன்னமே என் இயேசுவே

3.ஏன் இந்த சோதனை? என்று மனம் உடைந்தது
அறிந்தவர் நீர் மட்டும், என் இயேசுவே
என் தூங்கா இரவினில் மனமுடைந்த வேளையில்
தேற்றினீர் உம் வார்த்தையால் என் இயேசுவே

4.நெருக்கத்தின் வேளையில் என் தேவையின் பிடியினில்
வழியில்லை என்று நான் திகைக்கையில்
அதிசயமானவர் என் தேவை யாவையும்
சந்தித்தீர் நடத்தினீர் என் இயேசுவ