Panipola Peyyum

பனி போல பெய்யும்

பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே….
ஆவியே ஆவியே
மழையாக பொழியும் ஆவியே

சரணம் :

1. மென்மை யானவரே
மேகஸ்தம்பமே!
ஊற்றுத்தண்ணீர், ஜீவநதி
ஆனந்த தைலமே – (பனி போல)

2. யுத்தங்கள் செய்பவரே
யோர்தானை பிளந்தவரே
பெருமழையாய் ப்ரவேசித்த
உள்ளங்கை மேகமே – (பனி போல)

3. வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனி தரும் மரமாக
காப்பாற்றி வளர்ப்பவரே – (பனி போல)

4. ஆவியானவரே
ஆற்றல் தருபவரே
தேற்றரவே துணையாளரே
விண்ணகத் துபமே – (பனி போல)

5. அக்கினியானவரே
அன்பின் ஜுவாலையே
ஆசீர்வதியும் அரவணையும்
ஆன்மீகத் தீபமே – (பனி போல)


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *