Siluvaiyin nizhalil

சிலுவையில் நிழலில்

சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ….ஆ

  1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
    தளர்ந்தென் ஜீவியமே ஆ….ஆ
    சிலுவையண்டை வந்ததினால்
    சிறந்த சந்தோஷங் கண்டதினால்
    இளைப்படையாது மேலோகில்
    ஏகுவேன் பறந்தே வேகம் – சிலுவையில்
  2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
    ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ…..ஆ
    அவனியில் வியாகுலம் வந்தால்
    அவரையே நான் அண்டிக் கொண்டால்
    அலைமிக மோதிடும் அந்நாள்
    ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார் – சிலுவையில்
  3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
    இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ….ஆ
    திருமறை இன்னிசை நாதம்
    தேனிலுமினிய வேதம்
    தருமெனக்கனந்த சந்தோஷம்
    தீர்க்குமென் இதயத்தின் தோஷம் – சிலுவையில்