Sthothiram seivenae – தோத்திரம் செய்வேனே

தோத்திரம் செய்வேனே இரட்சகனைத்
தோத்திரம் செய்வேனே
பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணை வைத்த
பார்த்திபனை யூதக் கோத்திரனை என்றும் – தோத்திரம்

அன்னை மரிசுதனை – புல்மீது
அமிழ்ந்துக் கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை
முன்னுரை நூற்படி, இந்நிலத் துற்றோனை

செம்பொன்னுருவானைத் – தேசிகர்கள்
தேடும் குரவானை
அம்பர மேவிய உம்பர் கணத்தோடு
அன்பு பெற நின்று பைம் பொன்மலர் துவி

கந்தை பொதிந்தவனை -வானோர்களும்
வந்தடி பணிபவனை
மந்தையர் கானந்த மாட்சியளித்தோனை
வானபரன் என்னும் ஞான குருவானை