Thirukarathal Thangi Ennai

திருக்கரத்தால் தாங்கி என்னை

  • திருக்கரத்தால் தாங்கி என்னை
    திருச்சித்தம் போல் நடத்திடுமே
    குயவன் கையில் களிமண் நான்
    அனுதினமும் நீர் வனைந்திடுமே
  • உம் வசனம் தியானிக்கையில்
    இதயமதில் ஆறுதலே
    காரிருளில் நடக்கையிலே
    தீபமாக வழி நடத்தும்
  • ஆழ்கடலில் அலைகளினால்
    அசையும்போது என் படகில்
    ஆத்ம நண்பர் இயேசு உண்டே
    சேர்ந்திடுவேன் அவர் சமூகம்
  • அவர் நமக்காய் ஜீவன் தந்து
    அளித்தனரே இந்த மீட்பு
    கண்களினால் காண்கிறேனே
    இன்ப கானான் தேசமதை