Pr.Davidsam Joyson
உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன்
நீங்க பிடிச்சிடுங்க உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க உங்க சித்தம்போல என்னை
- தண்ணீரை கடந்தாலும் என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும் வெந்து போக விடமாட்டீர் -(2)
செழிப்பான இடத்திலே என்னை கொண்டு வந்திடுவீர்
அக்கினியும் தண்ணீரையும் நன்மையாய் மாற்றிடுவீர் – (2) – உம்மை நம்பி - அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகிறீர்
புரியாத (தெரியாத) பாதைகளை எனக்கு முன் வைத்துள்ளீர் – (2)
இருளை வெளிச்சமாய் என் முன்னே மாற்றிடுவீர்
தீமையை நன்மையாய் எனக்காய் மாற்றிடுவீர் – (2) – உம்மை நம்பி

