உருகாயோ நெஞ்சமே
- உருகாயோ நெஞ்சமே
குருசினில் அந்தோ பார்!
கரங்கால்கள் ஆணியேறித்
திருமேனி நையுதே! - மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
மாய்க்க வந்த மன்னவர்தாம்,
இந்நிலமெல் லாம் புரக்க
ஈன குருசேறினார். - தாக மிஞ்சி நாவறண்டு
தங்கமேனி மங்குதே,
ஏகபரன் கண்ணயர்ந்து
எத்தனையாய் ஏங்குறார். - மூவுலகைத தாங்கும் தேவன்
மூன்றாணி தாங்கிடவோ?
சாவு வேளை வந்தபோது
சிலுவையில் தொங்கினார். - வல்ல பேயை வெல்ல வானம்
விட்டு வந்த தெய்வம் பாராய்,
புல்லர் இதோ நன்றி கெட்டுப்
புறம்பாக்கினார் அன்றோ?