Urugayo nenjame

உருகாயோ நெஞ்சமே

  • உருகாயோ நெஞ்சமே
    குருசினில் அந்தோ பார்!
    கரங்கால்கள் ஆணியேறித்
    திருமேனி நையுதே!
  • மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
    மாய்க்க வந்த மன்னவர்தாம்,
    இந்நிலமெல் லாம் புரக்க
    ஈன குருசேறினார்.
  • தாக மிஞ்சி நாவறண்டு
    தங்கமேனி மங்குதே,
    ஏகபரன் கண்ணயர்ந்து
    எத்தனையாய் ஏங்குறார்.
  • மூவுலகைத தாங்கும் தேவன்
    மூன்றாணி தாங்கிடவோ?
    சாவு வேளை வந்தபோது
    சிலுவையில் தொங்கினார்.
  • வல்ல பேயை வெல்ல வானம்
    விட்டு வந்த தெய்வம் பாராய்,
    புல்லர் இதோ நன்றி கெட்டுப்
    புறம்பாக்கினார் அன்றோ?