வேதமே எந்தன் வெளிச்சமே
வழிகாட்டியும் அதுவே
இரவும் பகலும் தியானிப்பேன்
இடறிடேன் என்றென்றுமே – 2
- வாலிபன் எதினால் தன் வழியை
நிதமும் சுத்தம் செய்வான் – 2
வசனத்தின்படி தன்னை காப்பதினால்
பதறிடான் என்றென்றுமே – 2 - கர்த்தருடைய நியாயங்கள்
செம்மையும் தூய்மையுமே – 2
பேதையை ஞானி ஆக்கிடுமே
ஆன்மாவை உயிர்ப்பிக்குமே – 2 - பிழைப்பது தேவ வார்த்தையினால்
மாத்திரம் என்றறிவேன் – 2
குழந்தையை போல வாஞ்சிப்பேனே
அமருவேன் பாதத்தண்டை – 2