Yesuvin maarbinil saaruvenae

இயேசுவின் மார்பினில் – சாருவேனே

இயேசுவின் மார்பினில் – சாருவேனே
சாருவேனே , சாருவேனே ,
துன்பம் துக்கம் கண்ணீர் மறப்பேனே
மறப்பேனே ,மறப்பேனே.

  1. நீசச் சிலுவை மீதினிலே
    என் பாவம் போக்கத் தொங்கினீரே
    ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்
    என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே
    சேர்த்திடவே -இயேசு
  2. கல்வாரி நாதா நின் இரத்தத்தை
    சிந்தினீரே இப்பாவிக்காக
    கைகால்கள் ஆணிகள் கடாவப் பட்டதே
    முள்முடி சூட்டியே நின் சிரசில்
    நின் சிரசில் – இயேசு
  3. ஜீவனைவிட்ட என் நேசரே
    ஒப்புவித்தேன் என்னை உமக்காய்
    கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம் சூட்டியே
    விண்ணிலும் சேர்ப்பீரே பாவி என்னை
    பாவி என்னை – இயேசு
  4. காரிருள் மூடும் நேரத்தினில்
    கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்
    எந்தனை மீட்டிட உந்தனை ஈந்தீரே
    அன்பின் சொரூபி, என் இயேசு நாதா
    என் இயேசு நாதா – இயேசு