இயேசுவின் மார்பினில் – சாருவேனே
இயேசுவின் மார்பினில் – சாருவேனே
சாருவேனே , சாருவேனே ,
துன்பம் துக்கம் கண்ணீர் மறப்பேனே
மறப்பேனே ,மறப்பேனே.
- நீசச் சிலுவை மீதினிலே
என் பாவம் போக்கத் தொங்கினீரே
ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்
என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே
சேர்த்திடவே -இயேசு - கல்வாரி நாதா நின் இரத்தத்தை
சிந்தினீரே இப்பாவிக்காக
கைகால்கள் ஆணிகள் கடாவப் பட்டதே
முள்முடி சூட்டியே நின் சிரசில்
நின் சிரசில் – இயேசு - ஜீவனைவிட்ட என் நேசரே
ஒப்புவித்தேன் என்னை உமக்காய்
கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம் சூட்டியே
விண்ணிலும் சேர்ப்பீரே பாவி என்னை
பாவி என்னை – இயேசு - காரிருள் மூடும் நேரத்தினில்
கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்
எந்தனை மீட்டிட உந்தனை ஈந்தீரே
அன்பின் சொரூபி, என் இயேசு நாதா
என் இயேசு நாதா – இயேசு