Fr.S.J Berkmans
கட்டபட்ட மனிதரெல்லாம் ஏசா 61: 1
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்ட மனிதரெல்லாம்
கல்வாரி வர வேண்டும்
கர்த்தர் உம்மைக் காண வேண்டும் தேவா……தேவா
1.எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே
2.அறியாமை இருள் விலகி
அதிசய தேவனைக் காண வேண்டும்
3.பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும் – எங்கள்
4.இமயம் முதல் குமரி வரை – என்
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும்
5.உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும்
6.சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்

