Nalla Samariyan Yesu | நல்ல சமாரியன் இயேசு

லூக் 10: 33 -35

FR.S.J Berkmans

நல்ல சமாரியன் இயேசு
என்னைத் தேடி வந்தாரே

என்னைக் கண்டாரே
அணைத்துக் கொண்டாரே

அருகில் வந்தாரே
மனது உருகினாரே

இரசத்தை வார்த்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே

எண்ணெய் வார்த்தாரே
அபிஷேகம் செய்தாரே

காயம் கட்டினாரே
தோள்மேல் சுமந்தாரே

சபையில் சேர்த்தாரே
வசனத்தால் காப்பாரே

மீண்டும் வருவாரே
அழைத்துச் செல்வாரே