Ninaivu koorum deivame | நினைவு கூரும் தெய்வமே நன்றி

ஆதி 8: 1 ஆதி 19 : 29 1 கொரி 12: 27 எபே 2: 16,18 எபே 4: 26

Fr. S.J. Berchmans


நினைவு கூரும் தெய்வமே நன்றி
நிம்மதி தருபவரே நன்றி

நன்றி… இயேசு ராஜா..(4)

நோவாவை நினைவு கூர்ந்ததால்
பெருங்காற்று வீசச் செய்தீரே – அன்று
தண்ணீர் வற்றியதைய்யா
விடுதலையும் வந்ததைய்யா

ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
லோத்துவைக் காப்பாற்றினீரே
எங்களையும் நினைவு கூர்ந்து
எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா

அன்னாளை நினைவு கூர்ந்ததால்
ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
மலட்டு வாழ்க்கையெல்லாம் (நீர்)
மாற்றுகிறீர் நன்றி ஐயா – எங்கள்

கொர்நெலியு தான தர்மங்கள் – ஒரு
தூதனைக் கொண்டு வந்தது
குடும்பத்தையும் நண்பர்களையும்
இரட்சித்து அபிஷேகித்தீரே – அவன்

ராகேலை நினைவு கூர்ந்ததால்
யோசேப்பை பரிசாய் தந்தீரே
இன்னுமொரு மகனைத் தருவீர்
என்று சொல்லி துதிக்கச் செய்தீரே

எக்காளம் ஊதும் போதெல்லாம்
எங்களை நினைக்கின்றீர்
எதிரிகளின் கையிலிருந்து
இரட்சித்துக் காப்பாற்றுகிறீர்

Ninaivu Koorum Deivame Lyrics in English

Ninaivu koorum theivamae nandri
Nimmathi tharupavarae nandri

Nandri Yesu raajaa

Novaavai ninaivu koornthathaal
Perungaattaு veesach seytheerae – andru
Thannnneer vattriyathaiyyaa
Viduthalaiyum vanthathaiyyaa

Aapirakaamai ninaivu koornthathaal
Loththuvaik kaappaattineerae
Engalaiyum ninaivu koornthu
Engal sonthangalai iratchiyumaiyyaa

Annaalai ninaivu koornthathaal
Aannkulanthai petteduththaalae
Malattu vaalkkaiyellaam (neer)
Maatrukireer nanri aiyaa – engal

Korneliyu thaana tharmangal – oru
Thoothanaik konndu vanthathu
Kudumpaththaiyum nannparkalaiyum
Iratchiththu apishaekiththeerae – avan

Raakaelai ninaivu koornthathaal
Yoseppai parisaay thantheerae
Innumoru makanaith tharuveer
Endru solli thuthikkach seytheerae

Ekkaalam oothum pothellaam
Engalai ninaikkindreer
Ethirikalin kaiyilirunthu
Iratchiththuk kaappaattugireer