Unnathamanavar maraivinile | உன்னதமானவர் மறைவினிலே

சங் 91

Father S.J. Berchmans


உன்னதமானவர் மறைவினிலே
சர்வ வல்லவர் நிழல்தனிலே
தங்கி உறவாடி மகிழ்கின்றேன்
எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்

lalala……lallalaa…….

ஆண்டவர் எனது அடைக்கலமானார்
நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்
வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள்
தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்

தமது சிறகால் அரவணைக்கின்றார்
இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்
சத்திய வசனம் எனது கேடகம்
நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு

என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்
பதினாயிரம் பேர் தாக்கினாலும்
பாதுகாப்பவர் என் பக்கத்திலே
பாதிப்பு இல்லையே பயமில்லையே

செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்க
தமது தூதருக்கு கட்டளையிட்டார்
பாதம் கல்லிலே மோதாமலே
கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார்

சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன்
சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன்
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்
சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்

Unnathamanavar Maraivinile Lyrics in English

Unnathamaanavar maraivinilae
Sarva vallavar nizalthanilae
Thangi uravaadi makizkindren
Engum vettri naan kaannkindren

lalala……lallalaa…….

Aanndavar enathu ataikkalamaanaar
Naan nampum kottaைyum aranumaanaar
Vaedar kannnnikal kollai Nnoykal
Thappuviththu kaappaatti thaangukiraar

Thamathu sirakaal aravannaikkindrar
Irakkaiyin keelae amarach seikindrar
Saththiya vasanam enathu kaedakam
Nichchayam nichchayam viduthalai unndu

En pakkam aayirampaer vizunthaalum
Pathinaayiram paer thaakkinaalum
Paathukaappavar en pakkaththilae
Paathippu illaiyae bayamillaiyae

Sellum idamellaam ennaik kaakka
Thamathu thootharukku kattalaiyittar
Paatham kallilae mothaamalae
Kaikalil yaenthiduvaar thaangiduvaar

Singaththin meethu naan nadanthiduvaen
Seerum sarppangalai mithiththiduvaen
Samaathaanaththin Dhevan seekkiramaai
Saaththaanai kaaladiyil nasukkiduvaar