சங் 116: 8,9 ஆதி 5: 24 1 பேது 5: 4 ஆதி 6: 8 ஆதி 7: 7 யாக்கோபு 2: 23 ஆதி 18: 18 2 இராஜா 20: 3-5
கண் கலங்காமல் காத்தீரய்யா
கால் இடறாமல் பிடித்தீரய்யா
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உம்மோடு கூட நடந்திடுவேன்
உயிரோடு வாழும் நாட்களெல்லாம்
ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட
எடுத்துக் கொண்டீரய்யா
பிரதான மேய்ப்பன் நீர் வெளிப்படும்போது
மகிமையின் கிரீடம் என் தலைமேல்
நோவா நடந்ததால் உம் கண்களில்
கிருபை கிடைத்ததையா
குடும்பமாய் பேழைக்குள் செல் என்று சொல்லி
வெள்ளத்திலிருந்து காத்தீரய்யா
ஆபிரகாம் நடந்தான் உம்மோடுகூட
சிநேகிதன் என்றழைத்தீர்
செய்யப்போவதை மறைப்பேனோ என்று
தெரிவித்தீர் உமது திட்டங்களை
உண்மையாய் நடந்த எசேக்கியா ராஜா
விண்ணப்பம் கேட்டீரையா
கண்ணீரைக் கண்டு மரணத்தினின்று
விடுவித்து மீண்டும் வாழச்செய்தீர்
Kan kalangamal Lyrics in English
Kann kalangaamal kaaththeerayyaa
Kaal idaraamal pidiththeerayyaa
Uyirodu vaazum naatkalellaam
Ummodu kooda nadanthiduvaen
Ummodu kooda nadanthiduvaen
Uyirodu Vaazum naatkalellaam
Yenokku nadanthaan ummodukooda
Eduththuk konnteerayyaa
Pirathaana maeyppan neer velippadumpothu
Magimaiyin kreedom en thalaimael
Nova nadanthathaal um kannkalil
Kirubai kidaiththathaiyaa
Kudumpamaai paezaikkul sel endru solli
Vellaththilirunthu kaaththeerayyaa
Aabirakaam nadanthaan ummodukooda
Sinaegithan Endrazaiththeer
Seyyappovathai maraippaeno endru
Theriviththeer umathu thittangalai
Unnmaiyaai nadantha Esekkiyaa Raajaa
Vinnnappam kaettiraiyaa
Kannnneeraik kanndu maranaththindru
Viduviththu meenndum vaazachcheytheer

