Santhosam ponguthey (சந்தோஷம் பொங்குதே)

சந்தோஷம் பொங்குதே – (2)
சந்தோஷம் என்னில் பொங்குதே
அல்லேலூயா
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

  1. வழி தப்பி நான் திரிந்தேன் – பாவ
    பழியதை சுமந்தலைந்தேன்
    அவர் அன்புக் குரலே
    அழைத்தது என்னையே
    அந்த இன்ப நாளில்
    எந்தன் பாவம் நீங்கிற்றே (2) – சந்தோஷம்
  2. சத்துரு சோதித்திட தேவ
    உத்தரவுடன் வருவான்
    ஆனால் இயேசு கைவிடார்
    தானாய் வந்து இரட்சிப்பார்
    இந்த நல்ல இயேசு எந்தன்
    சொந்தமானாரே (2) – சந்தோஷம்
  3. பாவத்தில் ஜீவிப்பவர்
    பாதாளத்தில் அழிந்திடுவார்
    நானோ பரலோகத்தில்
    நாளும் பாடல் பாடிடுவேன்
    என்னில் வாழும் இயேசுவோடு
    என்றும் வாழுவேன் (2) – சந்தோஷம்