Irul soozum kaalam

இருள் சூழும் காலம் இனி வருதே

Dr.N.Emil Singh

இருள் சூழும் காலம் இனி வருதே
அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்
திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ?

திறவுண்ட வாசல் அடைபடுமுன்
நொருங்குண்ட மனதாய் முன் செல்வார் யார் ?
நாட்கள் கொடியதாய் மாறிடுதே
காலத்தை ஆதாயம் செய்திடுவோம்

  1. தரிசு நிலங்கள் அநேகம் உண்டு
    தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர்
    பரிசாக இயேசுவை அவர்களுக்கும்
    அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர் – திறவுண்ட
  2. எத்தனை நாடுகள் இந்நாட்களில்
    கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார்
    திறந்த வாசல் இன்று உனக்கெதிரில்
    பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள் – திறவுண்ட
  3. விசுவாசிகள் எனும் கூட்டம் உண்டு
    அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு
    ஒருமனம் ஒற்றுமை அங்கு உண்டு
    என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் – திறவுண்ட
  4. இனி வரும் நாட்களில் நமது கடன்
    வெகு அதிகம் விசுவாசிகளே
    நம்மிடை உள்ள ஐக்கியமே
    வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே – திறவுண்ட