என் ஆத்மா கவி பாடும்
தேவாதி தேவனைத் துதித்து
என் உள்ளம் மகழ்ந்தாடும்
கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து
வனாந்திரம் செழித்திடுமே
வயல்வெளி ஆகிடுமே
காடுவெளி களித்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா ( 4)
அல்லேலூயா (3) ஆமென்
லீபனோன் மகிமைகளும்
கர்மேலின் அழகுகளும்
சாரோனின் அலங்காரமும்
தோன்றிடும் ஆவியினால்
அல்லேலூயா அல்லேலூயா ( 4)
அல்லேலூயா (3) ஆமென்
நித்திய மகிழ்ச்சி என்றும்
தலை மேல் தங்கிடுமே
சஞ்சலம் தவிப்புகளும்
ஓடிடும் ஆவியினால்
அல்லேலூயா அல்லேலூயா ( 4)
அல்லேலூயா (3) ஆமென்

