Fr.SJ.Berkmans
ஏசா : 46 :3,4 லூக் : 12:32 , யோவான் 8: 36 , ஏசா :40:11, உபா 32: 10,11
சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்
- தாயின் வயிற்றில் தாங்கியவர்
தலை நரைக்கும் வரை தாங்கிடுவார்
விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ
வியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம் - ஆயன் ஆட்டை சுமப்பது போல்
ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்
பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு
பயப்படாதே சிறுமந்தையே - கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைப் பார்க்;கின்றார்
கழுகு போல் சிறகின் மேல் வைத்து
காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

