Maraname Un Koor Enge | மரணமே உன் கூர் எங்கே

1 கொரி 15: 55 எபி 2: 14,15 1 கொரி 15: 53 ரோமன் 14: 9 1 தெச 4: 16,17 2 கொரி 5: 1 வெளி 1: 8 வெளி 22: 12


Fr. S.J. Berchmans

மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு
எனக்குள் வந்துவிட்டார்

சாவை அழித்து அழியா வாழ்வை
எனக்கு தந்து விட்டார்

சாவுக்கு அதிபதி சாத்தானை -இயேசு
சாவாலே வென்றுவிட்டார்
மரண பயத்தினால் வாடும் மனிதரை
விடுவித்து மீட்டுக் கொண்டார்

பயமில்லை மரண பயமில்லை
ஜெயமெடுத்தார் இயேசு ஜெயமெடுத்தார்.

அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
அழியாமை அணிந்து கொள்ளும்
சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
சாவாமை அணிந்து கொள்ளும்

இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்
ஆளுகை செய்திடவே
இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
இன்றைக்கும் ஜீவிக்கிறார்

கட்டளை பிறக்க தூதர் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார்
கிறிஸ்துவுக்குள் வாழ்வோர் கிறிஸ்துவுக்குள் மரித்தோர்
எதிர்கொண்டு சென்றிடுவோம்

பூமிக்குரிய கூடாரமான
இவ்வீடு அழிந்தாலும்
பரமன் கட்டிய நிலையான வீடு
பரலோகத்தில் உண்டு

அகரமும் னகரமும் தொடக்கமும் முடிவும்
நான் தானே என்று சொன்னவர்
அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க
சீக்கிரத்தில் வருகின்றார்

Maraname un koor enge Lyrics in English

Maranamae un koor engae
Paathaalamae un jeyam engae
Maranaththai jeyiththa mannavan Yesu
Enakkul vanthuvittar

Saavai aziththu aziyaa vaazvai
Enakku thanthu vittar

Saavukku athipathi saaththaanai Yesu
Saavaalae vendruvittar
Marana payaththinaal vaadum manitharai
Viduviththu meettuk konndaar

Bayamillai marana payamillaiyae
Jeyam eduththaar Yesu jeyam eduththaar.

Azivukkuriya ivvudal oru naal
Aziyaamai aninthu kollum
Saavukkuriya ivvudal oru naal
Saagaamai aninthu kollum

Iranthor maelum vaazvor maelum
Aazugai seythidavae
Yesu mariththu uyirththu ezunthaar
Indraikkum jeevikkiraar

Kattalai pirakka thoothar kural olikka
Karththar Yesu vanthiduvaar
Kristhuvukkul vaazvor ,Kristhuvukkul mariththor
Ethirkonndu sendriduvom

Poomikkuriya koodaaramaana
Ivveedu azinthaalum
Paraman kattiya nilaiyaana veedu
Paralokaththil undu

Akaramum nakaramum thodakkamum mudivum
Naan thaanae endru sonnavar
Avanavan kiriyaikkuth thakuntha parisu alikka
Seekkiraththil varukindrar